திங்கள், ஜூலை 23, 2012

பிரணாப் வெற்றியைக் 'கொண்டாடிய' இலங்கை... 23 தமிழக மீனவர்களைக் கடத்தியது !

 23 Tamil Nadu Fishermen Arrested Lakan Navy ராமேஸ்வரம்: இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை, இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து இலங்கை கடற்படையிடம் கொடுத்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒட்டுமொத்தமாக கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை தாக்கி சேதப்படுத்தி அவர்களை நிலை
குலைய வைத்து பின்னர் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். கச்சத்தீவு அருகே இந்த அக்கிரமம் நேற்று நடந்துள்ளது.
மீனவர்கள் தவிர தமிழக மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கையர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இன்று அவர்களை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனராம்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் எமிரெட் கூறுகையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 20 படகுகளை இலங்கைக் கடற்படையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மீன்பிடி வலைகளையும் கிழித்தெறிந்து விட்டனர் என்றார் குமுறலுடன்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக் கடற்படையும், அந்த நாட்டு மீனவர்களும் கூட்டாக சேர்ந்து நடத்திய இந்த அக்கிரமச் செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காலவரையற்ற ஸ்டிரைக்
பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தி்ல் பதட்டம் நிலவுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக