புதன், ஜூலை 25, 2012

அஸ்ஸாம் பெண் மானபங்கம் – முக்கிய குற்றவாளி வாரணாசியில் சரண் !

Amarjyoti Kalita after his arrest in Varanasiலக்னோ:அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் சமீபத்தில் நிகழ்ந்த பெண் மானபங்கம் வழக்கில் முக்கிய குற்றவாளி வாரணாசி நகரில் கடந்த திங்கள் அன்று சரணடைந்துள்ளான். அமர்ஜோதி கலிட்டா என்பவன் உத்திரபிரதேச மாநில லங்கா காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் வன்புணர்வு குற்றம் தங்கள் எல்லையில் நடைபெறாததால் அவனை கைது செய்யவில்லை என்றும் அவனுடைய புகைப்படம் கவுஹாத்தி காவல் நிலையத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது என்றும் உத்தரபிரதேச காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர்ஜோதி கலிட்டா கடந்த ஜூலை 9-ஆம் தேதி அஸ்ஸாமில் மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் வைத்து இளம்பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வழக்கில் 12  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களை தவறு செய்யத் தூண்டியதாக டிவி நிரூபர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரை காவல்துறை தேடிவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக