வெள்ளி, ஜூலை 20, 2012

கட்சியிலும் ஆட்சியிலும் "ரொம்ப முக்கிய" பங்காற்ற முடிவு செஞ்சுட்டாராம் ராகுல்காந்தி !

டெல்லி: காங்கிரஸ் கட்சியிலும் மத்திய அரசிலும் முன்பைவிட கூடுதல் பொறுப்புகளை வகிப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் கூடுதல் பொறுப்புகளை ராகுல்காந்தி வகிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். சல்மான் குர்ஷித் முதலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் திக்விஜய்சிங்கும் அதிரடியாக இதே கருத்தைக்
கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது ராகுல்காந்தியின் கையில்தான் இருக்கிறது என்றார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த ராகுல்காந்தியிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, கட்சியிலும் ஆட்சியிலும் முன்பைவிட கூடுதல் பொறுப்புகளை வகிக்க முடிவெடுத்துவிட்டேன். அது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இந்தப் பொறுப்புகளை எப்போது ஏற்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும்தான் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக