புதன், ஜூலை 25, 2012

முஸ்லிம்கள் படுகொலை:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் மக்கள் போராட்டம் !

Palestinian demonstrators protest the killing of Muslims in Burmaகாஸ்ஸா:நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதுடன், அவர்களை நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் மியான்மர் அரசை கண்டித்து ஃபலஸ்தீன் காஸ்ஸா மக்கள் போராட்டம் நடத்தினர். காஸ்ஸாவில் நடந்த கண்டனப் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மியான்மரில் நடப்பது இனப்படுகொலையாகும். உலக சமூகம்
மெளனத்தை கைவிட்டு கலவரத்தை நிறுத்த முன்வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
காஸ்ஸா அரசும், ஃபலஸ்தீன் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அவையும் இணைந்து பேரணியை ஏற்பாடுச் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக