வெள்ளி, மே 03, 2013

அன்புமணி ராமதாஸ் கைது !

  • பாட்டளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

  • அன்புமணியை கைது செய்த காவல்துறையினர் அவரை திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளணர்.

  • காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி, குரு ஆகியோர் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கிற்காக தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

  • முன்னதாக இதே வழக்கில் குரு எம்.எல்.ஏ., இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து: