புதன், மே 08, 2013

கர்நாடகா தேர்தல்! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. இதற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித குளறுபடிகளும் ஏற்படாத வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, முதன்மை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஷா தெரிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு முதற்கட்ட நிலவரமும், 3மணிக்குள் வெற்றி வாய்ப்பு குறித்து தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் காலை 11 மணியளவில், எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரியவரும்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக