புதன், மே 08, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு : குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்! தமிழகத்தில் மேலும் ஐவர் கைது!

பெங்களூரு : பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்ததில் 16 நபர்கள் காயமடைந்தனர். இவ்வழக்கில் மேலப்பாளையத்தை சார்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் நேரத்தில் வாக்குக்காக நடத்தப்பட்ட நாடகம் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இச்சூழலில் ஏப்ரல் 17 அன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஹ்மதுல்லா, அஸ்கர் அலி, தென்காசி சுலைமான், ஹகீம், மான் பாய் ஆகியோரைத் தமிழக காவல்துறையும் பெங்களூர் நகர காவல்துறையும் இணைந்து கைது செய்ததாக பெங்களூர் காவல்துறை குற்றபிரிவு இணை கமிஷனர் பிரணாப் மொஹந்தி கூறினார். இத்துடன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக