திங்கள், மே 20, 2013

காலித் முஜாஹித் படுகொலை! - 42 போலீசார் மீது வழக்கு பதிவு!

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். 


இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டார். முஜாகித்தின் மாமா ஜாகீர் ஆலம் இந்த மரணம் தொடர்பாக கோட்வாலி போலீஸ் நிலையத்தில் பல உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 42 பேர் மீது புகார் கூறினார். போலீசார் அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். முஜாகித்தின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று மாநில அரசு இந்த மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக