வெள்ளி, மே 10, 2013

தேசிய அளவில் எதிர்ப்பு பேரணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்! - அன்வார்

மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறும் அவர், தேசிய அளவில் எதிர்ப்பு பேரணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
புதன்கிழமை நடந்த பேரணியில் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியபோது இத்தகைய அழைப்பை விடுத்தார். தேர்தல் முடிவுகளை ஏற்கப் போவதில்லை என்று அவர் ஏற்கெனவே கூறியுள்ளார். மலேசி யர்களிடமிருந்து வாக்குகளைக் கொள்ளையடிப்பதில் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்துள்ளது என்று கூறிய அவர், தேசிய முன்னணி அரசாங்கம் அதிகார உரிமையை இழந்து விட்டதாகக் கூறினார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக