புதன், மே 01, 2013

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம் !

  • மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம்
  • மற்றும் இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் அருகில் மஜீத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.S. ஷபீக் அஹமது தலைமை தாங்கினார். 
     
    சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் அஸ்ரப் கிராஅத் ஓதினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் A. காஜா மைதீன் வரவேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கபூர் மன்பஈ வாழ்த்துரை வழங்கினார்.


    இவ்விழாவில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன், SDPI கட்சியின் மாநில செயலாளர் V.M. அபுதாகிர் மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைச்செயலாளர் ஹபீபுன்னிஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக