
டெல்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப்படை மையம் இந்த ஒளிநாடாவை ஆய்வு செய்து இதில் சம்பந்தப்பட்டுள்ள எட்டு வீரர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். வீரேந்தர் திவாரி, விக்டர், தனஞ்செய் குமார், ஆனந்த்சிங், அமர் ஜோதி, சஞ்சீவ் குமார், சுரேஷ் சந்த் மற்றும் சுனில் குமார் ஆகியோரே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். 105 வது படைப்பிரிவைச் சார்ந்த இவர்கள் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவர் வங்காளதேசத்தைச் சார்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு படைவீரர் இன்டர்நெட் கபேக்கு சென்று பாடல்களை தரவிறக்கம் செய்ய தனது அலைபேசியைக் கொடுக்கும்போது அந்தக் கடையில் இருந்தவர் இந்த ஒளிநாடாவைப் பார்த்து மற்றவருக்கு அனுப்பியதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இன்னொரு செய்தியின்படி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே இந்த ஒளிநாடாவை பசுக்களை கடத்துபவர்களை பயமுறுத்துவதற்காக அனைவருக்கும் அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கிறது.
இந்திய வங்காளதேச எல்லையில் பசுவைக் கடத்திச் செல்வது மிகவும் சாதாரணமான ஒன்று என இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 135 கிமீ உள்ள இந்த எல்லையில் 110 கிமீ மட்டுமே வேலியிடப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக