செவ்வாய், மே 07, 2013

வறட்சி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கினர் !

  • தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர், இன்று காலை ஆய்வை தொடங்கினர். இதற்காக டெல்லியிலிருந்து வந்துள்ள 10 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஆய்வு பணிகளை நடத்துகின்றனர்.
  •  
  • பர்வேஸ் சர்மா தலைமையில், தமிழக அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கொண்ட குழு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
  •  
  • இதேபோல் மானஸ் சவுத்ரி உள்பட 11 பேர் கொண்ட மற்றொரு குழு திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்துகின்றனர். இன்று முதல் 9-ஆம் தேதி வரை ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக