1961ல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார் அன்சாரி.
1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்..மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் அன்சாரி.
மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின், வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி. இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் குடியரசு துணைத் தலைவராக்கியிருப்பதாக கூறப்படுவதும் உண்டு.
கடந்த 2007-ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலின் போது மொத்தம் 455 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவைவிட 233 வாக்குகள் வித்தியாசதில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக