
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாவை கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றமே சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர். அதே நேரத்தில் கர்நாடக ஆளும் பாஜகவின் துணையோடு ஆச்சார்யாவை அரசு தலைமை வழக்கறிஞராக்கியும் அகற்றப் பார்த்தனர். ஆனால் ஆச்சார்யா அந்தப் பதவியை ராஜினாம செய்துவிட்டு தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்,.
வழக்கின் விசாரணைகளின் போது பலமுறை ஜெயலலிதா தரப்பினரை கடிந்தும் சாடியிருக்கிறார் ஆச்சார்யா. இந்நிலையில் திடீரென கர்நாடக உள்துறை செயலருக்கு ஆச்சார்யா இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மன உளைச்சல் காரணமாக தாம் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஆச்சார்யாவின் ராஜினாமாவால் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான விவாதம் தொடங்கியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக