வெள்ளி, மார்ச் 29, 2013

படுகொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை வழங்க வலியுறுத்தி காஷ்மீரில் முழு அடைப்பு !

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கூட்டுமனசாட்சி என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான தி மஜிலிஸ் ஹூரியத் சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு காரணமாக ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்பு காரணமாக காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக