செவ்வாய், மார்ச் 19, 2013

ஐ.மு.,கூட்டணியில் திமுக உடனடியாக விலகுகிறது: கருணாநிதி அறிவிப்பு !!

ஐ.மு., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இன்று மாலை அல்லது நாளைக்குள் திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தா.
திமுக., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசிலீக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்தே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.
ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
தா.பாண்டியன் பாராட்டு: மத்தியில் ஆளும் ஐ.மு.,கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு திமுக  நிர்பந்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக