செவ்வாய், மார்ச் 19, 2013

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு தலைவர் சுப.உதயகுமாருக்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓ விருது!

இடிந்தகரை: தேசிய அளவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ வருடந்தோறும் மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் சி.மேனன் பெயரில் மனித உரிமை, சுற்றுச்சூழல் தளங்களில் போராடும் ஆர்வலர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் இவ்வாண்டு கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக தீரமிக்கதொரு போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் சுப.உதயகுமாருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக ஒரு மாதத்திற்கு முன்பே என்.சி.ஹெச்.ஆர்.ஓ அறிவித்தது.
இந்நிலையில் இவ்விருதை என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய தலைவர் ரெனி அய்லின் தலைமையில் கேரளாவைச் சார்ந்த என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் இடிந்த கரைக்கு வந்து நேரடியாக உதயகுமாரிடம் இவ்விருதை வழங்கினர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக