செவ்வாய், மார்ச் 26, 2013

மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் ஐ.நா தூதர்!

யங்கூன்:புத்த தீவிரவாதிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் 32 பேர் பலியான மியான்மரின் மீக்திலா நகருக்கு ஐக்கிய நாடுகளின் தூதர் பார்வையிட சென்றுள்ளார்.

வீடுகளும், கடைகளும் மற்றும் பள்ளிவாசல்களும் நிர்மூலம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த ஐ.நா தூதுவரான விஜய் நம்பியார் அவர்கள், இந்த வன்செயல்களுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மீக்திலாவைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தற்காலிக கூடாரங்களில் இருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலையை அரசாங்கம் பிரகடனம் செய்த பிறகு, இந்தமத்திய நகரத்தில் பர்மிய படையினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக