செவ்வாய், மார்ச் 12, 2013

உடுப்பி கிறிஸ்தவ வழிப்பாட்டுத்தலம் மீது பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்குதல் !

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டுத்தலம் மீது பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. மதமாற்ற பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள
வழிப்பாட்டுத்தலத்தில் உள்ள ஒரு நபர் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று நேற்று முன் தினம் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் போராலிங்கய்யா கூறுகிறார்.
கிறிஸ்தவ பிரச்சாரகர் ஒருவரின் வீடு மீதும் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 19 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது. கிழக்கு மண்டல ஐ.ஜி பிரதாப் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக