திங்கள், ஜூலை 02, 2012

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.திடுக்கிடும் தகவல் !


   கௌஹாத்தி - தன்னைத் தாக்க முயன்றவர்கள் பலாத்காரம் செய்ய முயன்றதாக அசாம் மாநில போர்கோலா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 29.06.12 அன்று கரீம்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூமிநாத்(வயது 33)தனது கணவருடன் இருக்கும்போது. நூற்றுக்கணக்கானவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கியது. இது பற்றி இன்று கருத்து தெரிவித்த ரூமிநாத், தன்னைத் தாக்கியவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். அநாகரீகமான இந்த சம்பவத்தின் பிண்ணயில் அரசியல் சதித்திட்டம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தாக்குதல் நடத்தியவர்கள் யாரெனத் தெரியவில்லை எனக்குறிப்பி்ட்ட ரூமிநாத், இந்த சம்பவத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐவரைக் கைது செய்துள்ளனர். ரூமிநாத், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இதற்காக அவர் முஸ்லிமாக மதம் மாறியது குறி்ப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக