
இப்பேட்டியை எடுத்த ‘நை துனியா’ ஆசிரியர் ஷாஹித் சித்தீக், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என தகவல் வெளியானது. ஆனால், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராம் கோபால் யாதவ் இதனை மறுத்துள்ளார்.
அவர் கூறியது: “ஷாஹித் சித்தீகி, சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீண்டகாலத்துக்கு முன்பே விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து விட்டார். அக்கட்சி சார்பில்தான் மக்களவைத் தேர்தலில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அங்கிருந்தும் விலகி, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்து விட்டார். அவரை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. மோடியுடன் இணைவதற்கு சித்திக் விரும்பியிருக்கலாம்” என்றார் ராம் கோபால் யாதவ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக