புதன், ஆகஸ்ட் 29, 2012

லஞ்சம் தர மறுத்த முஸ்லிம் இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காவல்துறையினர் !

மும்பை குர்லா பகுதியை சேர்ந்த ஹபீபுல்லா என்பவர் ஆட்டுக் கறியை ரயிலில் கொண்டு சென்று வடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.சில தினங்களுக்கு முன் இவர் குர்லாவில் இருந்து திலக் நகருக்கு ரயிலில் சென்றார்.அப்போது ரயிலில் வந்த 4 போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஓடும் ரயிலில் இருந்து அவரை
கீழே தள்ளி விட்டனர்.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவு திரும்பிய அவர் 4 போலீசார் மீதும் புகார் தந்தார். இதையடுத்து போலீசார் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக