புதன், ஆகஸ்ட் 29, 2012

கேரளா:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி !

குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான்கோட்டைக்கல்:வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக பணியாற்றும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் சார்பாக கேரள மாநிலம் கோட்டைக்கல்லில் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. பி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுமுறையில் இந்தியாவுக்கு சென்றுள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் குடும்பத்துடன்
கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி, என்.டபிள்யூ.எஃப் தேசிய துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் கன்வீனர் அஷ்ரஃப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஐடியல் ஃபேமிலி என்ற தலைப்பில் நவாஸ் எம். நிஸ்தார் வகுப்பை நடத்தினார். “நீங்கள் என்னை துரோகி ஆக்கிவிட்டீர்கள்” என்ற தலைப்பில் நாடகமும் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக