ஃபஹீம் அன்ஸாரி குற்றமற்றவர் என்பதை துவக்கத்தில் அவரது வழக்கில் ஆஜரான கொலைச் செய்யப்பட்ட சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபஹீம் அன்ஸாரியின் விடுதலையைக் குறித்து அவர் மனைவி கூறியது:
“எனது கணவருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் எனது கணவர் மீதான தீவிரவாத கறை துடைத்தெறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஃபஹீம் அன்ஸாரி தற்பொழுது இன்னொரு பொய் வழக்கான 2007-ஆம் ஆண்டு உ.பி மாநிலம் ராம்பூர் சி.ஆர்.பி.எஃப் முகாமை தாக்கப்பட்ட வழக்கில் பரேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக