புதன், ஆகஸ்ட் 22, 2012

விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அமைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு !

விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அமைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின்னர் கடலில் மீட்கப்பட்டது.உள்துறை அமைச்சர் ஜெசி ரோபிரிடோ (54) உடல் மாஸ்பேட் மத்திய தீவு பகுதிக்கு அருகே கடலில் 55 மீட்டர் ஆழத்தில் கிடந்ததை நீர் மூழ்கி வீரர்கள் (டைவர்ஸ்) செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடித்தனர் என்று போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மார் ரோக்ஸ்
தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியது: நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 3 நாள்களாக போராடி ஜெசி ரோபிரிடோ உடலை மீட்டனர். அவரது உடல் செவ்வாய்கிழமை காலை கரைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், பிலிப்பின்ûஸ சேர்ந்த பைலட், நேபாளத்தை சேர்ந்த மற்றொரு துணை பைலட்டின் உடல்களையும் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது என்றார் மார் ரோக்ஸ். இந்த விபத்தில் அமைச்சரின் உதவியாளர் ரோக்சாஸ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் ஜெசி ரோபிரிடோ மற்றும் பைலட்களுடன் சேர்த்து 4 பேர் சென்ற சிறிய ரக விமானம் என்ஜின் கோளாறு காரணமாக கடலில் விழுந்தது. கடந்த 3 நாள்களாக அமைச்சர் உள்ளிட்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இறந்த ஜெசி ரோபிரிடோ, பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோஸ் அமைச்சரவையில் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். முன்னதாக மேயராக பதவி வகித்த அவர், சிறந்த நிர்வாகத்துக்காக கடந்த 2000-ம் ஆண்டு மகசேசே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக