வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

விமானத்தில் தூங்கிய பெண் பயணி. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தார் !

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விமானம் புறப்பட்டது. அதில் பேட்ரிஸ் கிறிஸ்டைன் அகமது என்ற பெண் பயணம் செய்தார். விமானம் பாரிஸ் சென்றது. ஆனால் பேட்ரிஸ் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளார். அதை விமான ஊழியர்களும் கவனிக்கவில்லை. மறுநாள் பாரிசில் இருந்து விமானம் மீண்டும் லாகூர் புறப்பட்டது. அப்போது தூக்கத்தில் இருந்து விழித்தவர் அதிர்ச்சி
அடைந்தார். Ôஐயையோ நான் பாரிசில் இறங்க வேண்டும். விமானத்தை பாரிசுக்கு திருப்புங்கள்Õ என்று சத்தம் போட்டார்.

அதை கேட்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Ôவிமானத்தை மீண்டும் பாரிசுக்கு திருப்ப முடியாது. அமைதியாக உட்காருங்கள்Õ என்று ஊழியர்கள் கூறிவிட்டனர். வேறு வழியின்றி மீண்டும் லாகூர் வந்தார் பேட்ரிஸ். பாரிசில் அவர் இறங்காததை எப்படி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று தீவிர விசாரணை நடக்கிறது. முதல்கட்ட விசாரணையில் பேட்ரிஸ் தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ் தான் விமான அதிகாரிகள் கூறுகையில், Ôபேட்ரிஸ் பாரிஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதுÕ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக