வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம் !

ஈரானிய ஜனாதிபதி நேற்று (செவ்வாய்கிழமை) குறுகிய தொலைவு தரையில் இருந்து தரைக்கு ஏவும் பாலஸ்டிக் ஏவுகணை (short-range surface-to-surface ballistic missiles) பற்றி பிரஸ்தாபித்திருப்பது, இஸ்ரேலுக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. பொதுவாக ஈரான் தம்மிடமுள்ள சென்சிடிவ் ஆயுதங்கள் பற்றி வாய்
திறப்பதில்லை.
இந்த ஏவுகணை பற்றி இரு வாரங்களுக்கு முன் ஈரானிய தேசிய செய்திச் சேவை IRNA, மேலோட்டமாக இரண்டு வரி செய்தி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தது. Fateh-110 (மேலேயுள்ள போட்டோ) ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பதே அந்த செய்தி.
ஈரானிய ஜனாதிபதி நேற்று பாதுகாப்பு நிபுணர்களை சந்தித்தபோது, “எம்மிடம் உள்ள புதிய ஏவுகணைகள், ‘அருகில் உள்ள’ எதிரிகளை கதிகலங்க வைக்கக்கூடியவை என்பதை உறுதி செய்து கொண்டுள்ளோம். எம்மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டால், இந்த ஏவுகணைகளை, அவர்களுடைய நாட்டு எல்லைகளில் வைத்தே இயக்கும் அளவுக்கு, எம்மிடம் வலிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.
அந்த செய்தி, அரசு செய்தி நிறுவனத்தால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், இந்த பேச்சு வெளியே போக வேண்டும் என ஈரானிய அரசு விரும்புகிறது.
ஜனாதிபதி, Fateh-110 என்ற பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது நிஜம்தான். ஆனால், அதைத் தவிர வேறு ஏதும் இந்த ரகத்தில் அவர்களிடம் புதிதாக இல்லை என்பதால், அதுதான் ட்ரம்ப் என்று ஊகிப்பது கடினமல்ல.
சர்வதேச ராணுவ வட்டாரங்களில் கிடைக்கும் தகவல்களில் இருந்து, Fateh-110, நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்றே தெரிகிறது. சடுதியாக இயங்கும் தன்மை, நீண்ட பேட்டரி ஆயுள்காலம், மற்றும், எந்த காலநிலையிலும் இயங்கும் தன்மை ஆகியவை  இந்த ஏவுகணைக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
தற்போதைய நிலையில் ஈரானுடன் ராணுவ ரீதியாக சேலஞ்ச் பண்ணும் இரு நாடுகள், அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். இந்த இரு நாடுகளில், ஈரானிய ஜனாதிபதி குறிப்பிடும் ‘அருகில் உள்ள எதிரி’, சாட்சாத் இஸ்ரேல்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக