உடனே அந்த பாம்பை பிடித்த விவசாயி நறநறவென திரும்ப திரும்ப கடித்திருக்கிறார். அந்த நல்ல பாம்பை சாகும் வரை கடித்து தூக்கி வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
பின்னர் எதுவும் நடக்காதது போல தனது வேலைகளை செய்து இருக்கிறார். இவ்விஷயம் தனது குடும்பத்தினருக்கு தெரிய வர அவர்களின் வற்புறுத்தலுக்கு பிறகு மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக்கொண்டிருக்கிறார்.
நேபாளில் விஷமற்ற இந்த கோப்ரா வகை நல்லப்பாம்புகள் அரியவகை பட்டியலில் இல்லை. அதனால் அவர் மீது எந்த வழக்கும் காவலர்களால் பதிவு செய்யப்படவில்லை.
மலைப்பிரதேஷ நாடான நேபாளில் உள்ள டேரை தென் சமவெளிப் பகுதியில் சென்ற ஆண்டில் மட்டும் 20,000 பேரை பாம்பு கடித்திருக்கிறது. அதில் 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக