வியாழன், பிப்ரவரி 09, 2012

அந்த 3 பேரையும் புடிச்சி உள்ளே போடுங்க : அண்ணா ஹசாரே

   டெல்லி: சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த 3 கர்நாடக அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவாதி, சிசி பாட்டில் மற்றும் கிருஷ்ண பாலிமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த 3 பேரையும் சட்டசபையில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் கட்சிகளில் இதுபோன்ற ஆட்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் புனிதமான கோவில்கள், நாடாளுமன்றம், சட்டசபை ஆகியவற்றை அசிங்கப்படுத்துகின்றனர். ஆனால் அப்படிபட்டவர்களுக்கு சீட் கொடுக்கத் தான் அரசியல் கட்சிகள் போட்டா போட்டு போடுகின்றன. அவர்களால் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக ஆகிவிடும். 

அந்த 3 பேரும் சட்டசபை மற்றும் அரசியலமைப்பை இழிவுபடுத்தியுள்ளனர். எனவே, அவர்களை சட்டசபையில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டசபையில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்படவிருக்கிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக