வியாழன், டிசம்பர் 26, 2013

கர்நாடகா மடிக்கேரி நகராட்சி தேர்தல்: 4 வார்டுகளில் எஸ்டிபிஐ வெற்றி!

மடிக்கேரி: கர்நாடகா மாநிலம் மடிக்கேரி நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 வார்டுகளிலும், பா.ஜ.க. 8 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 24 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று 4 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நான்காவது வார்டில் எஸ்.டி.பி.ஐ.யின் பெண் வேட்பாளர் நீமா அர்ஷாத் 133 வாக்குகள் வித்தியாசத்திலும், ஐந்தாவது வார்டில் கே.ஜி. பீட்டர் 14 வாக்குகள் வித்தியாசத்திலும், 22-வது வார்டில் அமீன் முஹ்ஸின் 314 வாக்குகள் வித்தியாசத்திலும், 23-வது வார்டில் மன்சூர் 198 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
மடிக்கேரியில் முதல்முறையாக எஸ்.டி.பி.ஐ. போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக