புதன், டிசம்பர் 04, 2013

இந்து பயங்கரவாதியை கொன்ற இந்து பயங்கரவாதி !

இந்தூர்: ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கொலை செய்த வழக்கில் பா.ஜ.க பயங்கரவாதி ஜிதேந்திர சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை (NIA) தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திலீப் ஜகதாப் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையில் ஜிதேந்திர ஷர்மாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷர்மாவை, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீவிரவாதி ஜிதேந்திர ஷர்மாவுக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு, சம்ஜவ்தா குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றில் இவருக்குத் தொடர்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக