வியாழன், டிசம்பர் 05, 2013

I N T J போஸ்டரை கிழித்த மதுரை காவல்துரை

மதுரை: "பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் தூக்கிலிடுக" முதலான கோரிக்கைகளுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் காவல்துறை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற டிசம்பர் 6 ஐ முன்னிட்டு இந்திய தௌஹீது ஜமாத் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு பேனர்கள் வைக்கப்பட்டிந்தன. "டிசம்பர் 6 இந்திய இறையாண்மை தகர்க்கப்பட்ட நாள்", "பாபர் மசூதியைத் தகர்த்த அனைவரையும் தூக்கிலிடு" முதலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களை நீக்கம் செய்ய வேண்டுமென விஷ்வ ஹிந்து பரிசத் எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு பேனர்கள் அனைத்தையும் காவல்துறை நீக்கம் செய்தது. மதுரையில் பேனர் வைக்க முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் முன் அனுமதி ஏதும் பெறாமல் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக