சனி, டிசம்பர் 07, 2013

மோடியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது- பிரதமர்

பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.தலைமைப் பன்புகள் குறித்து டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஒரு அரசியல் கட்சியாக, எதிர்கட்சியின் பலத்தை தான் எப்போதும் குறைத்து கணித்தது இல்லை என்றார்  மேலும்,
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் கட்சி தன் நம்பிக்கையுடன் திர்கொள்கிறது என்றும், தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை மீது தவறான அர்த்தம் கற்பிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.மத வன்முறை தடுப்பு மசோதா, காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியல் என்ற கருத்து முற்றிலும் தவறானது என தெரிவித்த அவர் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மதக் கலவரங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக