வியாழன், டிசம்பர் 19, 2013

இந்தியாவின் எதிர்கால அரசியல் SDPI கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி!

இந்தியாவின் எதிர்கால அரசியல் என்ற தலைப்பில் SDPI கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதி சார்பாக இந்தியாவின் எதிர்கால அரசியல் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை 13.12.2013 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதி தலைவர் ரசூல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் அவர்கள் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார், 
 அம்பத்தூர் தொகுதி பொருளாளர் ஷேக் தொகுப்புரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் முஹம்மது பிர்தவுஸ், மாவட்ட துணை தலைவர்கள் புஹாரி, மீரான், இக்பால், மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது அலி, மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஹமது பாஷா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட பிரதிநிதி ஜின்னா சிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.எதிர்கால அரசியல் என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் சிறப்புரையாற்றினார்.மேலும் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா மற்றும் ரத்தினம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக அம்பத்தூர் தொகுதி செயலாளர் அஹமது நன்றிவுரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல் வீரர்கள், பொதுமக்கள் உட்பட 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 10000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக