ஐ.நா.,: ஐ.நா., சபையில் உறுப்பு நாடாக சேர பாலஸ்தீனத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்பு குழு தனது பரிசீலனையை துவக்கியுள்ளது. ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் தற்போது பார்வையாளராக உள்ளது. தங்களது நாட்டை முழு உறுப்பினர் நாடாக அங்கீகரிக்ககோரி,
கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.நா., சபையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணியை இன்று துவக்கியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ஹர்பிந்தர் சிங் பூரி, ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் நாடாக சேர, இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 1988ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.நா., சபையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணியை இன்று துவக்கியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ஹர்பிந்தர் சிங் பூரி, ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் நாடாக சேர, இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 1988ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக