திங்கள், நவம்பர் 21, 2011

கபடியில் உலகச் சாம்பியன் கோப்பையை வென்றது இந்தியா


லூதியானா:பஞ்சாப்பில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய கபடி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.இறுதிப் போட்டியில் கனடாவை எதிர்கொண்ட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய இரு அணிகளும் இறுதிப் போட்டியிலும் மோதின எனினும் லீக் சுற்றில் தோல்வியடைந்தது போலவே இறுதிப் போட்டியிலும் கனடா தோல்வியை தழுவியது.

இறுதியில் இந்தியா 59-25 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி உலக சாம்பியனானது.
இரண்டாமிடத்தை கனடா அணியும், மூன்றாமிடத்தை பாகிஸ்தான் அணியும் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக