செவ்வாய், நவம்பர் 22, 2011

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது

imagesCAVTOL0V
புத்தூர்(கர்நாடகா):முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் சோஷியல் நெட்வர்க் இணையதளமான ஃபேஸ்புக்கில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்த மாணவன் பொன்னப்பா(வயது 19) என்பவனை போலீஸ் கைதுச் செய்துள்ளது.முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபத்துல்லாஹ்வின் மீது நிர்வாணமான பெண்ணொருத்தி இருப்பதைப் போன்ற படமும், இன்னும் சில மார்ஃபிங் செய்த படங்களையும் இம்மாணவன் போஸ்ட் செய்துள்ளான். சைபர் சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக