செவ்வாய், நவம்பர் 01, 2011

மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது

முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் 9 முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்காது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் மத்திய அரசு தலையிடாது. உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை தாக்கல் செய்தபிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவே ப.சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக