வெள்ளி, ஜனவரி 06, 2012

பத்திரிகையாளருக்கு அடி: மீண்டும் விஜயகாந்த் அதிரடி…!


தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை நேற்று முன்தினம் பார்வையிட்ட தே.மு.தி.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், தனது வழக்கமான பாணியினை(?!)  கடலூரிலும் அரங்கேற்றம் செய்தார்.
திருச்சோபுரம் கிராமத்தில் கூட்ட நெரிசல் இருந்ததால் அங்கிருந்த தொண்டர்களை விஜயகாந்த் தள்ளி விட்டார். இக்காட்சியினை அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் படம் எடுக்கவே, கோபமடைந்த விஜயகாந்த் தனது கையால் அதை தடுத்த போது, அவர் விரலில் அணிந்திருந்த
மோதிரம் பத்திரிகையாளரின் கையை கிழித்தது. அதைக்கண்ட சக பத்திரிகையாளர், “ஏன் பத்திரிகையாளர்களை அடிக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “பத்திரிகையாளர்னு அடையாள அட்டையா மாட்டியிருக்கீங்க” எனக் கேட்டவாறு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

இதைக்கண்ட மற்றொரு பத்திரிகையாளர், "விஜயகாந்த் கையால் அடி வாங்கியவர் இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார், உனக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது" என அடி வாங்கிய பத்திரிகையாளரிடம் தெரிவிக்கவே அந்தச் சூழ்நிலையிலும் அந்த இடம் கலகலப்பாகியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக