கடலூர் மாவட்டத்தில் "தானே' புயல் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது முந்திரி, பலா மரங்களை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். அதற்கு தகுந்தாற்போல் அரசு நிவாரணங்கள் வழங்க வேண்டும். முந்திரி, பலா பயிர்செய்யப்பட்ட விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறாமல் இருக்க அரசு தடுக்க வேண்டும்.
தானே புயலினை மத்திய, மாநில அரசுகள் தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது போல் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
குடிசை வீடுகளுக்கு 2,500 நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனால் வீடு கட்டுவதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார். பேட்டியின் போது மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் அப்துஸ் ஸமது, மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜின்னா, பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள், ஜாக்கீர், பிலால், செய்யது, ஹஸன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக