செவ்வாய், ஜனவரி 10, 2012

தானே புயல்: தமிழம், புதுவைக்கு பிரதமர் ரூ.625 கோடி நிதி !

தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதியாக 625 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இந்த நிதி, புயல் சேதங்களை நேரில் பார்வையிட்ட மத்திய குழுவின் முதல்கட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்தார். இதில் தமிழகத்திற்கு ரூ.500 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 125 கோடியும்
வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

தானே புயலால் தமிழகத்தில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக