செவ்வாய், ஜூன் 24, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாலர் அப்துல்ஹமீது இன்று ( 24.06.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கடந்த 17.06.2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.இதில் கட்சி வளர்ச்சி சம்பந்தமாகவும்,உள் கட்டமைப்பு சம்பந்தமாகவும்,வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு மாநில தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இன்று(24.06.2014) முதல் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு மாவட்டமாக செயல்படும்.இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதி ஆகியவை இணைந்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்டமாக செயல்படும்.பரமக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஆகியவை இணைந்து இராமநாதபுரம் மேற்கு மாவட்டமாக செயல்படும்.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவராக சோமு அவர்களும்,இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவராக பி.எஸ்.ஐ.கனி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் பணிகளில் ஆக்கபூர்வமாக செயல்படுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக