திங்கள், ஜூன் 30, 2014

ரயில் கட்டணத்தையும், சர்க்கரை விலையையும் உயர்த்துவதற்குத்தான் மோடி கடுமையாக உழைத்துள்ளார்

ஆட்சிப் பொறுப்பேற்று 30 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் எழுதியுள்ள அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை கூறுகையில், “தனது 30 நாள் செயல்பாடுகள் குறித்து வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் உழைப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.
ரயில் கட்டணத்தையும், சர்க்கரை விலையையும் உயர்த்துவதற்குத்தான் அப்படி கடுமையாக உழைத்துள்ளனர் போலும். தனது அறிக்கையில், “தேனிலவு’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது, அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குலைப்பதாக உள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக