புதன், ஜூன் 04, 2014

உலகக்கோப்பை கால்பந்து: பந்துகளை தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் பெண்கள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் 12-ம் தேதி பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த கால்பந்துத் திருவிழா அங்கு ஒரு மாதத்திற்கு நடக்க உள்ளது. 
ஆனால் இந்தப் போட்டிக்குத் தேவையான பந்துகளைத் தயாரிக்கும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக உள்ள பாகிஸ்தான் கால்பந்து தரவரிசையில் உலகளவில் 159ஆவது இடத்தில் உள்ளது வியப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும்.  

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் உள்ள பார்வேர்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து அடிடாஸ் நிறுவனத்திற்காக இந்த பந்துகளை தயாரித்து சப்ளை செய்துவருகின்றது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு லியொநெல் மெஸ்சியையோ, தங்கள் நாடு இந்தப் போட்டியில் பங்கேற்காததோ தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் பிரேசிலும், குரேஷியாவும் அங்கு துவக்கும் முதல் போட்டியில் விளையாடப் பயன்படுத்தப்படுவது தாங்கள் தயாரிக்கும் பந்துகளாக இருக்கக்கூடும் என்பதுவே அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது. 

கிரிக்கெட்டில் தீவிர விருப்பம் கொண்டுள்ள பாகிஸ்தானியர்களுக்கு கால்பந்து போட்டிகளின் மீது பெரிதளவான நாட்டம் இல்லாதபோதிலும் தங்களின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுவதாலேயே இந்தப் போட்டிகளைக் காண இருப்பதாக அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக