செவ்வாய், ஜூன் 24, 2014

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி


பாலிங்-கிரிக் நெடுஞ்சாலையின் அருகே இரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 பெரோடுவா கன்சில்-ஐ ஓட்டி வந்த பாதுகாவலராக பணிபுரியும் அலியாஸ் அகமது (51) சம்பவம் நிகழ்ந்த இடத்திலே மாண்டார். மாறாக அவரது மனைவி ரொஸ்னா ஹஷிம் (51) மற்றும் அவரது மகன் முகமது சுஃபியன் அலியாஸ்(12), அருகிலிருந்த கூலிம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்துள்ளனர்.
இதனிடையே, எதிரே வந்த நிசான் செந்த்ரா காரில் பயணித்த எசா ரஹ்மான் (77) சம்பவம் நடந்த இடத்திலே உயிர் இழந்தார். அந்த காரின் ஓட்டுனரான அபு மன்சோர் (50), ஹஸ்னா ஹமீது (51) மற்றும் அலி டஹாவாங் படுகாயம் அடைந்துள்ளனர்.
கூலிம்-பாலிங்-கிரிக் நெடுஞ்சாலையின் 45.5 கிலோ மீட்டர் தொலைவில் மதியம் 5.40 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தைக் குறித்து போலீஸ் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளது. தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதின் வழி உயிர் இழப்பு நிகழ்ந்திருப்பதாக பாலிங் ஒசிபிடி, கெ. வாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக