திங்கள், ஜூன் 30, 2014

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் நோன்பு வாழ்த்து

ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன்’ என தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, மகாராஷ்ட்டிர முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் இஸ்லாமியர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக