செவ்வாய், ஜூன் 17, 2014

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்

F1 கார்பந்தய சாதனையாளர் மைக்கல் ஷூமாக்கர் கோமாவிலிருந்து மீண்டு விட்டதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர் Grenoble மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பிறகு பெயர் குறிப்பிடவிரும்பாத இடத்தில் மைக்கல் ஷூமாக்கர் முழுமையாக உடல் நலம் தேறும் வரை ஓய்வெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மைக்கல் ஷூமாக்கர் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக