சனி, ஜூன் 14, 2014

இராக்கில் (ஐஎஸ்ஐஎல்) படை முன்னேறுகிறது: அமெரிக்க ஆதரவு அரசு முடங்குகிறது

இராக் நாட்டில் சன்னி முஸ்லிம் களின் படை முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் இதர சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர். அல்கொய்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎல் படையினர் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொசுல் நகரில், ஷாரியா சட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎல் படைகள் தலைநகரான பாக்தாதுக்கு மிக அருகில் வந்துவிட்டன. இராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் 2011-ம் ஆண்டு வெளியேறிவிட்டன.
இதனால், தற்போதுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கிர்குக் நகரத்துக்குள் நுழைந்துள்ள குர்திஸ் பாதுகாப்புப் படை, அங்குள்ள விமானப்படைத் தளத்தின் முக்கியப் பொறுப்பு களைக் கைப்பற்றி யுள்ளது. ராணுவம் அங்கிருந்து பின்வாங்கி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக