வியாழன், ஜூன் 26, 2014

துவாரகா பீட சங்கராச்சாரியார் மீது மேலும் ஒரு புகார்

ஷீரடி சாய்பாபாவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்த துவாரகா பீட சங்கராச்சாரியார் மீது மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஷீரடி சாய் பாபாவை வணங்கக் கூடாது என்றும், அவர் கடவுளின் அவதாரம் இல்லை என்றும் துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சமீபத்தில் கூறியிருந்தார். இது சாய் பாபா பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர் மீது ஷீரடி (மகாராஷ்டிரா) மற்றும் இந்தூர் (மத்திய பிரதேசம்) ஆகிய பகுதிகளில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். 

இப்போது ஐதராபாத் சரூர் நகரில் சாய்பாபா கோவிலை நிர்வகிக்கும் சாய் டிரஸ்ட் சார்பில் சங்கராச்சாரியாருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் சட்ட ஆலோசனை கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக