வியாழன், ஜூன் 26, 2014

5 டெஸ்ட், 4 ஒருநாள், ஒரு 20 ஓவர் கொண்ட நீண்ட தொடர் புதிய சவாலாக இருக்கும்: டோனி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு நீண்ட நாள் பயணமாக சென்றுள்ளது. 5 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடும் இந்தியாவிற்கு இது புதிய சாவாலாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சிதோசன நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும். இது அவர்களுக்கும் தெரியும். இதனால் இந்த தொடர் எங்களுக்கு கடுமையாக இருக்கும். 5 டெஸ்ட், 4 ஒருநாள், ஒரு 20 ஓவர் கொண்ட நீண்ட தொடர் விளையாட இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 5 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. ஆகவே இது எங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்ததால் இங்கிலாந்தை அணியை எளிதாக நினைக்க முடியாது. இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்த தொடர் எங்களுக்கு சவாலானதாக இருக்கும்.

இங்கிலாந்து கேப்டன் கடந்த சில காலங்களாக மோசமாக விளையாடி வருகிறார். அவரது கடந்த கால சாதனைகளை எண்ணி பார்க்க வேண்டும். சிறந்த வீரர்களுக்கு இதுபோன்ற சோதனைக்காலம் வரும். ஆனால், அதில் இருந்து அவர்கள் மீண்டு வருவார்கள்.

இக்காட்டான நேரத்தில் குக் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்துள்ளார். சிறந்த வீரர்களுக்கு இதுமாதிரி நேரத்தில் ரசிகர்கள், சக வீரர்கள், மீடியாக்கள் துணையாக இருக்க வேண்டும் என்று டோனி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக